ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம் 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் ஒருவரை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமையைகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது 

News image
Updated On :11 மார்ச் 2019, 6:51 pm IST

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் ஒருவரை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமையைகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது 

பொள்ளாச்சி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன், பேஸ்புக் மூலம்  பேசி, பழகி, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு என்னும் வாலிபன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார்  உட்பட 7 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த் வழக்கில் ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியானது. 

முன்னதாக  கடந்த மாதம் 12ஆம் தேதி கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று ஆபாச விடியோ எடுத்து அத்துமீற முயன்றதாக சபரி (எ) ரிஷ்வந்த் உள்பட மூன்று பேர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். புகார் கொடுத்த மாணவியின் சகோதரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக சபரி (எ) ரிஷ்வந்த்தின் நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்ட போதுதான், இவர்கள் இதுபோன்று ஏராளமான பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் கோவை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் 'பொள்ளாச்சி' நாகராஜ் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரது பெயரிலும் வெளியான அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால், பொள்ளாச்சி நாகராஜ் கட்சியின் அடிப்படைஉறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.