காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சீட் கிடைக்காத அதிருப்தி: திமுக கூட்டணிக்கு ஆதரவு தர அதிமுக முன்னாள் அமைச்சர் ரெடி?

நாடாளுமன்றத் தேர்தலில் தான் கேட்ட சீட் கிடைக்காத அதிருப்தியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தரத் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Published On :

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தான் கேட்ட சீட் கிடைக்காத அதிருப்தியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தரத் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதாவின்  அமைச்சரவையில் பொதுப்பணித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை வகித்தவர் ராஜகண்ணப்பன்.

பின்னர் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் காங்கிரசின் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்ட அவர் 3,354 ஓட்டுகள் வித்தியாசத்தில் நூலிழையில் தோற்றார்.

Story image

தற்போது 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் அல்லது மதுரை தொகுதியை அவர் எதிர்பாத்துக் காத்திருந்தார்.   ஆனால் அதிமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதுரை தொகுதி ராஜகண்ணப்பனனுக்கு கிடைக்கக் கூடாது என்று சில அதிமுக அமைசசர்கள் லாபி செய்ததாக கூறப்படுகிறது.   

இந்நிலையில் சீட் கிடைக்காத அதிருப்தியில், ராஜகண்ணப்பன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தரத் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

திங்கள் மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை அவர் சந்திக்கத்  திட்டமிட்டுள்ளார் என்றும், அப்போது அவர் தனது ஆதரவைத் தெரிவித்து திமுகவால் இணைவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.