மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அதிமுகவின் எதிர்கால நலன் கருதி ஆதரவு தருகிறேன்.. சொல்லியிருப்பது யார் தெரியுமா?

மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவளிப்பதாக தலைவர் ஜெ. தீபா அறிவித்துள்ளார்.

News image
Updated On :22 மார்ச் 2019, 11:29 am

DIN


சென்னை: மக்களவை மற்றும் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆதரவளிப்பதாக தலைவர் ஜெ. தீபா அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. தீபா, அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியைக் கருத்தில் கொண்டு அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் அது அதிமுக தொண்டர்களின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
 
அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்குப் பிறகு தொடரும், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இணைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

அதிமுகவின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் , நிர்வாகிகள் ஈடுபடுவார்கள். அதிமுக தலைமை கேட்டுக் கொண்டால் அக்கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் தீபா அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.