மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொய் வாக்குறுதிகளை வாரி இரைத்துள்ள அதிமுகவின் இணைப்பு தேர்தல் அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

அதிமுகவின் இணைப்பு தேர்தல் அறிக்கை பொய் வாக்குறுதிகளை வாரி இரைத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

News image
Updated On :25 மார்ச் 2019, 10:57 am

DIN

சென்னை: அதிமுகவின் இணைப்பு தேர்தல் அறிக்கை பொய் வாக்குறுதிகளை வாரி இரைத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் இணைப்பு தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பல “பொய்வரலாறுகளையும்”, “பொய் வாக்குறுதிகளையும்” வாரி இரைத்துள்ளது. “ஏழு தமிழர்கள்” விடுதலைக்காக மத்திய அரசையும், குடியரசுத்தலைவர் அவர்களையும் வலியுறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

“ஏழு தமிழர்களின்” விடுதலையில் அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த, மறைந்த ஜெயலலிதா முதலமைச்சாராக இருந்த போது கொண்டுவரப்பட்ட, சட்டமன்ற தீர்மானத்தை மத்திய மோடி அரசுக்கு அனுப்பிய பிறகும், தமிழக அமைச்சரவை ஏழுபேரையும், விடுவிக்க ஒப்புதல் தெரிவித்த பிறகும், உச்சநீதிமன்றமே வழிகாட்டிய பிறகும், மாநில ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதையும், மத்திய மோடி அரசு இவ்விஷயத்தில் கனத்த மௌனமாக இருப்பதையும், எடப்பாடி பழனிச்சாமி அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதே போல், ‘நீட்’ தேர்வு வேண்டாம் என அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தமிழக சட்டசபை தீர்மானமும் கிடப்பில் உள்ளது. இதற்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தன்னையும், தன் அமைச்சரவையையும் காப்பாற்றிக் கொள்ள மோடியிடம் அடிமையாய் கிடக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக அரசு தற்போது தேர்தல் நேரத்தில் “பசப்பு நாடகம்” ஆடுவதை தமிழக வாக்காளர்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

நடைபெற உள்ள தேர்தலில் இவர்களுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.