தீவிரவாதிகள் அடைபட்டு இருக்கக்கூடிய அறையில் வைத்திருக்கிறார்கள். இன்னொருவர் மன நோயாளிகள் அடைத்து வைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய அறையில். அவர்களிடத்தில் கட்டாயப்படுத்துகிறார்கள், மிரட்டுகிறார்கள் அச்சுறுத்துகின்றார்கள். வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்து போடுங்கள் என்று தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி காலையில் வந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல இப்பொழுது வாட்ஸ்அப்களில் தொலைக்காட்சிகளில் ஒரு செட்டப் செய்து வீடியோ போட்டிருக்கின்றார்கள். சையன் சொல்வது போல், என்னை கட்டாயப்படுத்தி எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்த சொன்னார்கள் என்று ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கின்றார்கள். சையன் சிறையில் இருக்கின்றார், ஏன் இப்படி ஒரு செய்தி வெளிவருகிறது என்றால், உருவத்தை காட்டவில்லை. குரல் மட்டும் தான் வருகின்றது. ஆனால், தெம்பிருந்தால் திராணி இருந்தால் தைரியம் இருந்தால் அவரை வெளியில் விட்டு விட்டு அவரை சொல்லச் சொல்லுங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே, கொடநாடு கொலை நடந்த பொழுது அப்பொழுது குண்டர் சட்டத்தில் அடைக்கவில்லை. ஆனால், வெளியில் வந்து செய்தியைச் சொன்னதற்குப் பிறகு இப்பொழுது குண்டர் சட்டத்தில் அடைக்கின்றார்கள். இந்த வீடியோவின் பின்னணி என்ன, குண்டர் சட்டத்தில் அடைத்து வைத்துவிட்டு இதுபோன்று ஒரு வீடியோவை வெளியிட்டு கொண்டிருக்கக்கூடிய நிலை இன்றைக்கு அவர்களுக்கு ஏன் வந்துள்ளது. இதிலிருந்து எப்படியாவது தப்பிக்கலாம் என்கின்ற முயற்சி.