மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸூக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் முதலில் அறிவிக்கப்பட்டனர். சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:
நான் இரண்டாவது முறையாக சிவகங்கையில் களமிறங்குகிறேன். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் காரணமாக நான் வெற்றி பெறுவது நிச்சயம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் சிவகங்கை தொகுதியை ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி ஒதுக்கி வருகிறது. அங்கிருந்து காங்கிரஸ் சார்பில் 6 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 2 முறையும் ப.சிதம்பரம் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த போடி மலை கிராமங்களில் வாக்குப் பதிவு அதிகரிப்பு!

கோபத்தை, சோகத்தைச் சொல்ல தமிழ் மொழி போல வேறு மொழி கை கொடுக்காது: பேராசிரியா் கு. ஞானசம்பந்தன்

விஷம் குடித்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


