வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, தேர்தல் அதிகாரிகளால் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அப்போது 10 முறை வாக்கு இயந்திரங்களில் பல்வேறு கட்சிச் சின்னங்களில் வாக்களித்து சோதனை செய்வார்கள். பிறகு வாக்குப்பதிவுக்கு வைக்கும் போது மாதிரி வாக்குப் பதிவுக்காக பதிவு செய்த வாக்குகளை அழித்துவிட்டு வாக்குப்பதிவை பூஜ்யத்தில் வைத்துத் தொடங்குவார்கள். ஆனால், தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 46 வாக்குச்சாவடிகளில் அவ்வாறு பூஜ்யத்தில் வைக்காமல் வாக்குப்பதிவு தொடங்கியிருப்பதன் மூலம், வாக்குப்பதிவில் தவறுகள் நடந்திருப்பது தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.