சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தந்தை, மகன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (26). இவர், சேலம் அருகே நாட்டாமங்கலம் பகுதியில் மாட்டு இறைச்சிக் கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் ரமேஷ், தனது உறவினர் பாலுவுடன் (35) கஞ்சநாயக்கன்பட்டியிலிருந்து மாடு ஒன்றை வாங்கிக் கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த சாதிக் பாஷா (46) என்பவரின் மினி வேனில் மாட்டை ஏற்றிக் கொண்டு நாட்டாமங்கலத்தில் உள்ள இறைச்சி கடைக்குச் சென்று கொண்டிருந்தார்.
மினி வேனை சாதிக் பாஷா ஓட்டினார். அவருக்கு உதவியாளராக அவரது மகன் ரகமத் பாஷா(17) உடன் சென்றார்.
சனிக்கிழமை நள்ளிரவு 12.45 மணி அளவில் மினி வேன் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் சரக்கு லாரியும், அதற்கு பின்னால் தண்ணீர் லாரியும் சென்று கொண்டிருந்தன.
மினி வேனுக்கு பின்னால் மற்றொரு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது.
முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்து நிற்க முயன்ற காரணத்தால், பின்புறமாக வந்து கொண்டிருந்த 3 வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதின.
இதில் நடுவில் சிக்கிக் கொண்ட மினி வேன் பலத்த சேதமடைந்தது. வேனில் இருந்த ரமேஷ், பாலு, சாதிக்பாஷா, ரகமத் பாஷா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த சூரமங்கலம் போலீஸார் விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியால் 4 வாகனங்களையும் அகற்றி போக்குவரத்தைச் சரிசெய்தனர். இந்த விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

தலைவர்களை இழிவுபடுத்தும் இடமல்ல சட்டமன்றம்! கனிமொழி எம்.பி | DMK | TVK

வெனிசுவேலா நிலநடுக்கம்! மீட்புப் படைகளை அனுப்பும் அமெரிக்கா!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



