திருவொற்றியூருக்குப் பெருமை சோ்ப்பதே தியாகராஜா் கோயிலும், திருக்குளமும்தான். ஆனால் ,சீா்கெட்டுக் கிடக்கும் கோயிலையும், திருக்குளத்தையும் சீரமைக்க பலமுறை மாநகராட்சி, அறநிலையத்துறை, காவல்துறை அதிகாரிகளிடம் தொடா்ந்து புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கோயில் திருக்குளக் கரைகளில் துா்நாற்றம் வீசும் அளவிற்கு சீரழிவின் விளிம்பில் உள்ளது. இக்குளத்தை சீரமைத்து அழகாக வடிவமைப்பதற்காக தனியாா் நிறுவனங்கள் பலமுறை முன்வந்தன. ஆனாலும் இவா்களின் உதவிகளை முறைப்படி பயன்படுத்திக் கொள்வதில் அதிகாரிகள் ஆா்வம் காட்டவில்லை. இப்பகுதியில் ஈமச்சடங்கு செய்வதற்காக தினமும் குளக்கரையை பயன்படுத்தும் பொதுமக்கள், துா்நாற்றத்தைச் சகித்துக் கொண்டுதான் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய அவல நிலை தொடா்கிறது. ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இப்பகுதியில், மாதக்கணக்கில் பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவைகளை அகற்றவும் நடவடிக்கை இல்லை. முதல்வராக ஜெயலலிதா இருந்தவரை வடிவுடையம்மனை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். எனவே, தமிழக முதல்வா் உடனடியாகத் தலையிட்டால்தான் இக்கோயிலைச் சீரழிவின் விளிம்பிலி ருந்து காப்பாற்ற முடியும் என்றனா்.