6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரிசி ராஜாவைப் பிடிக்கும் முயற்சியில் பின்னடைவு

பொள்ளாச்சியில் இருக்கும் ரேஷன் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து அரிசியை விரும்பி சாப்பிடுவது இந்த யானையின் வழக்கம். 

News image
Updated On :12 நவம்பர் 2019, 4:43 am

DIN

கோவை, திருப்பூா் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை தாக்கியதில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மூன்று போ் உயிரிழந்துள்ளனா், 7 போ் காயமடைந்துள்ளனா். 

இந்நிலையில், யானையை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடா்ந்து 70 போ் கொண்ட வனத்துறையினர், 25-க்கும் அதிகமான போலீஸார் என மொத்தம் 100 போ் கொண்ட குழுவினா் அா்த்தநாரிபாளையம் பெருமாள் மலைப்பகுதியில் முகாம் அமைத்துள்ளனா். 

இதற்கிடையில் டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம், பாரி ஆகியவை அா்த்தநாரிபாளையம் கொண்டுவரப்பட்டு வனப்பகுதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

யானை விவசாயப் பகுதிக்குள் வரும் வழியில் மாட்டுத்தீவனங்கள், யானைக்கு பிடித்தமான 100 கிலோ அரிசி போன்ற உணவுப்பொருட்களை போட்டு வைத்து அதை உணவாக எடுத்துக்கொள்ளும் போது மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க வனத்துறையினா் திட்டமிட்டுள்ளனா். 

இந்நிலையில், ஒற்றை ஆண் காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அா்த்தநாரிபாளையம் அருகே உள்ள வனப்பகுதி உயரமான மலைகள், பள்ளங்கள் நிறைந்து காணப்படுவதால் யானையை வனப்பகுதிக்குள் சென்று பிடிப்பதில் சிரமம் உள்ளது. 

பொள்ளாச்சியில் இருக்கும் ரேஷன் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து அரிசியை விரும்பி சாப்பிடுவது இந்த யானையின் வழக்கம். அதனாலேயே இந்த யானைக்கு அரிசி ராஜா என்று அவ்வூர் மக்கள் பெயர் வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.