சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு 

தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழகத்திற்கு யூரியா ஒதுக்கீடு
தமிழகத்திற்கு யூரியா ஒதுக்கீடு
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாகதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளது.

அதில் 45கிலோ யூரியா மூட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.266.50 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது

விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையுடன் சென்று அங்கீகரிக்கப்பட்ட உர விற்பனை நிலையங்களில் தேவையான அளவு யூரியாவைப் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com