
சென்னை: தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாகதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளது.
அதில் 45கிலோ யூரியா மூட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.266.50 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது
விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையுடன் சென்று அங்கீகரிக்கப்பட்ட உர விற்பனை நிலையங்களில் தேவையான அளவு யூரியாவைப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.