தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்காக கனரா வங்கி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளது.
கனரா வங்கியின் சேர்மன் பத்மஸ்ரீ டி.என்.மனோகரன், ரூ.25 லட்சத்திற்கான காசோலையை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய இயக்குநர் சி.என்.மகேஸ்வரனிடம் வழங்கினார். கனரா வங்கியின் பொது மேலாளர் எம்.அப்துல் அஜீஸ் மற்றும் துணை பொது மேலாளர் பிராங்கிளின் செல்வகுமார் மற்றும் வங்கியின் முக்கிய அதிகாரிகள், ஊழியர்கள் இந்த நிகழ்வின்போது உடன் இருந்தனர்.