

சென்னை: ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து அதிக அளவில் நீர் திறக்கப்படுவதால் திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலதில் பெய்து வரும் கனமழையால் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
இதன் காரணமாக அணையின் மதகுகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 620 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக திருவள்ளூர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.