கனமழை எதிரொலி: இந்த இடங்களில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலி காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கும், நீலகிரியில் 4 தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read


கனமழை எதிரொலி காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கும், நீலகிரியில் 4 தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து முதல்வர் வி. நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால்:

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளிப்பதாக, அம்மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா அறிவித்துள்ளார். 

நீலகிரி:

உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com