சென்னை: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியில் இருந்து 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 65,000லிருந்து 72,000 கனஅடியாக அதிகரித்துக் காணபப்டுகிறது.
இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியில் இருந்து 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.59 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 89.67 டிஎம்சி ஆக உள்ளது.