உங்கள் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யுமா? சென்னை வானிலை ஆய்வு மையம் பதில்

தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம்
சென்னை வானிலை மையம்
Published on
Updated on
1 min read


சென்னை: தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, நெல்லை ஆகிய மவாட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் 14 செ.மீ. மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 13 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இந்த தென்மேற்குப் பருவ மழை காலத்தில் ஒட்டுமொத்தமாகக் கிடைக்க வேண்டிய பருவ மழையின் அளவு 36 செ.மீ. ஆனால், 42 செ.மீ. மழை கிடைத்திருக்கிறது.

தென்மேற்குப் பருவ மழை முடிவுக்கு வர இன்னும் 10 நாட்கள் இருக்கின்றன. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து படிப்படியாக தென்மேற்குப் பருவமழை குறையும். தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை அக்டோபர் முதல் வாரத்தில் முடியும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com