தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பத்தாம் வகுப்பு மொழித்தேர்வுகளுக்கு இனி ஒரே தாள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி  

பத்தாம் வகுப்பு மொழித்தேர்வுகளுக்கு இரண்டு தாள்களுக்குப் பிறகு இனி ஒரே தாள் மட்டும்தான் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.  

News image

பத்தாம் வகுப்பு மாணவர்கள்

Updated On :13 செப்டம்பர் 2019, 4:34 pm

DIN

சென்னை: பத்தாம் வகுப்பு மொழித்தேர்வுகளுக்கு இரண்டு தாள்களுக்குப் பிறகு இனி ஒரே தாள் மட்டும்தான் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.  

கடந்த கல்வி ஆண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழித்தேர்வுகளிலும், தற்போது நடைமுறையில் உள்ள தாள்-1 மற்றும் தாள் -2 ஆகிய இரண்டு தாள்களுக்குப் பதிலாக ஒரே தாள் தேர்வு மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்புவெளியானது.

அப்போதே விரைவில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த நடைமுறை கொண்டு வரப்பப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மொழித்தேர்வுகளுக்கு இரண்டு தாள்களுக்குப் பிறகு இனி ஒரே தாள் மட்டும்தான் என்று வெள்ளி மாலை பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.  

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் விடைத்தாள் திருத்த எளிதாக இருப்பது, பாடத்தை ஆசிரியர்கள் திறம்பட நடத்த உதவுவது மற்றும் மாணவர்களுக்கு எளிமையான் கற்றல் ஆகியவையே இந்த முடிவையெடுக்க காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நடைமுறையானது தற்போதைய கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.