நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: சிதம்பரம் கோயில் தீட்சிதர்களிடம் போலீஸார் விசாரணை

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக, அந்தக் கோயிலின் பொது தீட்சிதர்களிடம் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை

Updated On :18 செப்டம்பர் 2019, 2:57 am IST


கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக, அந்தக் கோயிலின் பொது தீட்சிதர்களிடம் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
இந்தக் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தொழிலதிபரின் குடும்ப திருமணம் அண்மையில் விமரிசையாக நடைபெற்றது. கோயில் மரபை மீறி ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, திருமணத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக கோயில் தீட்சிதரான பட்டு தீட்சிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயனிடம் பாஜக மாநில இளைஞர் அணி பொருளாளர் கோபிநாத் கணேசன் புகார் அளித்தார். இதையடுத்து, டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் சி.முருகேசன் ஆகியோர் பொது தீட்சிதர்களை சிதம்பரம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். பொது தீட்சிதர்கள் பாஸ்கர் தீட்சிதர், பட்டு தீட்சிதர், நவமணி தீட்சிதர், புகார்தாரர் கோபிநாத் கணேசன் உள்ளிட்டோர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.
பின்னர் தீட்சிதர்கள் கூறியதாவது:
நடராஜர் கோயில் வரலாற்றில் மிகப் பெரிய தவறு நடந்துள்ளது. அதற்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காது என்றனர்.
பின்னர் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் கூறியதாவது: 
திருமணம் தொடர்பாக வருகிற 23-ஆம் தேதி இரு வீட்டாரையும் அழைத்து விசாரணை நடத்த உள்ளோம். அதன்பிறகே இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.