இடைத் தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் திங்கள்கிழமை மாலை நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நேர்காணலை ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் நடத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி, மருத்துவ அணிச் செயலாளர் பி.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய ஆட்சிமன்றக் குழுவானது நேர்காணலை நடத்தியது.