இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல் 

நான்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

News image
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
Updated On :31 ஜனவரி 2024, 10:11 am

DIN

சென்னை: நான்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. ஆளும்கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிக்கும் நிகழ்வு, சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. 

இந்த நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரி சுமார் 90 பேர் வரை விருப்ப மனுக்களை அளித்திருந்தனர். இதேபோன்று, புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 5 பேர் வரை விருப்ப மனு அளித்திருந்தனர்.

இடைத் தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் திங்கள்கிழமை மாலை நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நேர்காணலை ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் நடத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி, மருத்துவ அணிச் செயலாளர் பி.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய ஆட்சிமன்றக் குழுவானது நேர்காணலை நடத்தியது.

மாலை 4 மணிக்குத் தொடங்கிய நேர்காணல், இரவு 7.30 மணி வரை நடந்தது. நேர்காணலை முடித்த பின் வெளியே வந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, வேட்பாளரை இறுதி செய்யவில்லை என்றார்.

இந்நிலையில் நான்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதிகளுக்கு புதனன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை  காமராஜ் நகர் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிக்கப்படுவார்கள்' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.