விக்கிரவாண்டி, நான்குநேரி மற்றும் காமராஜர் நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு 

எதிர்வரும் அக்டோபர் 21--ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நான்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
Published on
Updated on
1 min read

சென்னை: எதிர்வரும் அக்டோபர் 21--ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நான்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல்களில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் கட்சியின் சார்பாக புதனன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எதிர்வரும் 21-10-2019 அன்று நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நான்குநேரி மற்றும் புதுச்சேரி - காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (25-09-2019) அறிவித்துள்ளார் .

வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு;

விக்கிரவாண்டி: கு.கந்தசாமி - சமூகச் செயற்பாட்டாளர்     

நான்குநேரி: சா.ராஜநாராயணன் - இளங்கலை வரலாறு     

காமராஜர் நகர் (புதுச்சேரி): பிரவினா மதியழகன் - குத்தூசி மருத்துவப் பட்டயப்படிப்பு

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com