நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடல் நீர்மட்டம் உயரும்.. சென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - ஐ.நா. வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவதால் 2100ஆம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2019, 7:08 am

சி.பி.சரவணன்

காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவதால் 2100ஆம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கடல்மட்டம் 50 சென்டி மீட்டர் உயர்ந்தால் கூட சென்னையில் வெள்ளத்தால் சேதம் ஏற்படும் என்ற நிலையில் 2100ஆம் ஆண்டிற்குள் ஒரு மீட்டர் அளவுக்கு கடல்நீர் மட்டம் உயரும் என கூறப்பட்டுள்ளது.

இதேப்போல் கடற்கரை நகரங்களான மும்பை, கொல்கத்தா, சூரத் ஆகிய இந்திய நகரங்கள் உள்பட உலகம் முழுவதும் 45 நகரங்களுக்கு வெள்ள அச்சுறுத்தல் உள்ளதாகவும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.சபையின் குழு தெரிவித்துள்ளது.

பூவி வெப்பமயமாதல் காரணமாக புயல் தாக்கம் போன்ற தீவிர பாதிப்புகள் இந்த நூற்றாண்டில் பலமுறை , வருடத்திற்கு ஒரு முறை நிகழக்கூடும் என்று காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC) மொனகோவில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.