ஐ.நா. சபையில் தமிழில் பேசிய பிரதமர் மோடியை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது கூட்டம், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், பிரதமர் மோடி பேசும்போது, சுவாமி விவேகானந்தர், கணியன் பூங்குன்றனார் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசியதாவது: 1893-இல் சிகாகோ நகரில் நடைபெற்ற ஆன்மிக மாநாட்டில் விவேகானந்தர் பேசும்போது, அமைதியையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தினார்.
125 ஆண்டுகளுக்கு முன் அவர் சொன்ன அதே செய்தியை, இந்தியா தற்போதும் உலக நாடுகளுக்கு வலியுறுத்துகிறது. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனார் கூறினார். அனைத்து ஊர்களும் நம் ஊரே, அனைவரும் நம் உறவினர்களே என்பது அதன் பொருள். எல்லைகள் கடந்து சிந்திப்பதே இந்தியாவின் தனித்துவமான பண்பு என்றார் மோடி.
இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டரில், “ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே, தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம் நாங்களே” என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! நாளை வைகையில் எழுந்தளுருகிறார்!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


