சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது 4ம் தேதி மாலை தெரியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டமானது அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:
சட்டப்பேரவையில் என்னென்ன அம்சங்களைப் பேச வேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசனை நடத்தினோம்.
திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் சூட்சமம் உள்ளது.
மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து ஏதோ செய்கின்றனர்
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது நானா, துரைமுருகனா அல்லது டி.ஆர்.பாலுவா என்பது 4ம் தேதி மாலை தெரியும்
ரஃபேல் விவகாரத்தில் உண்மையை தான் ராகுல் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.