மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும், தமிழ் ஆர்வலருமான இரா. மோகன் (69) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஒப்பிலக்கியத் துறைத் தலைவராக பணியாற்றிய இவர், பட்டிமன்ற நடுவராகவும் இருந்துள்ளார். பேராசிரியர் மோகன் ஒப்பிலக்கியம், தமிழாய்வு, தன் முன்னேற்ற சிந்தனைகள், தமிழ் வளர்ச்சி நூல்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
2011-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது பெற்றுள்ள அவர், சாகித்ய அகாதெமி அமைப்பின் பொதுக்குழு உறுப்பினராக 10 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். பேராசிரியர் இரா.மோகன் பணி ஓய்வு பெற்ற பின்னர் காமராஜர் பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு மனைவி, மகள் உள்ளனர். பேராசிரியர் இரா. மோகனின் இறுதிச் சடங்கு மதுரையை அடுத்த நாகமலைப்புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 94436-75931.