பொள்ளாச்சி: பொள்ளாச்சி:பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட கைது செயயப்பட்ட ஐந்து பேர்மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரித்த பொள்ளாச்சி காவல்துறையினர் நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட ஐந்து பேரைக் கைது செய்தனர்.
முதலில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு அதனபின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி:பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட கைது செயயப்பட்ட ஐந்து பேர்மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.