தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது. இதன் தொடக்க விழா வேண்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு தொடக்கி வைத்தார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
துணை முதலமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தலைமையில் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், வருவாய் நிா்வாக ஆணையா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் தமிழக அமைச்சா்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் ஆட்சியரான ஏ.ஜான்லூயிஸ், அரசு உயா் அதிகாரிகள் உட்பட பலரும் பங்கேற்றனா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் என 3 வருவாய் கோட்டங்கள் இடம்பெற்றுள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், வண்டலூர் ஆகிய தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலத்தில் 25.23 லட்சம் வாக்குகளை 253 சுற்றுகளில் எண்ண நடவடிக்கை!

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

சேலம் கோட்டத்தில் இன்றுமுதல் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வாழப்பாடியில் சித்திரைத் திருவிழா ஆழித்தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


