தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோவளம் பீச்சில் துப்புரவு பணி செய்த மோடி: கார்த்தி சிதம்பரம் பகிர்ந்திருக்கும் பகீர் ஃபோட்டோ

கடந்த வாரம் சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி கோவளம் கடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். 

News image
Updated On :15 அக்டோபர் 2019, 6:17 am


கோவளம்: கடந்த வாரம் சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி கோவளம் கடற்கரையில் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். 

அந்த புகைப்படமும், விடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அது தொடர்பான விடியோவை பிரதமர் மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அவர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்ததை ஏராளமான ஊடகங்கள் கேமராவில் பதிவு செய்தது போன்ற ஒரு புகைப்படத்தை கார்த்தி சிதம்பரம் பகிர்ந்துள்ளார்.

இது உண்மையான புகைப்படமா? அல்லது வேறு சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா? என்பது குறித்து எந்த உறுதியும் செய்யப்படவில்லை. ஆனால் இது குறித்து மீம்ஸ்கள் ஏற்கனவே உருவாகி அவையும் வைரலாகி வருகிறது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் மாமல்லபுரம் வந்தார். இருநாட்டுத் தலைவர்களுக்கிடையிலான முதற்கட்ட சந்திப்பு மாமல்லபுரத்தில் நிறைவடைந்த நிலையில், கோவளத்தில் தங்கியிருந்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், பிரதமர் மோடி சனிக்கிழமை காலை கடற்கரையோரம் நடை பயணம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, கடற்கரையில் நிறைய குப்பைகள் இருந்ததால், அவர் அதைத் தனது கைகளால் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி இந்தப் பணியை சுமார் 30 நிமிடங்கள் மேற்கொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அங்கிருந்த குப்பைகளுள் பெரும்பாலானவை பிளாஸ்டிக் குப்பைகளாகவே இருந்தன.

இதையடுத்து, தான் அகற்றிய குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தோளில் சுமந்தபடி, ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் ஒப்படைத்தார். கையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமலே பிரதமர் மோடி இந்த தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பான 3 நிமிடங்கள் கொண்ட விடியோ காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார். தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தியதிலிருந்தே, நமது இடத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடியோவும், புகைப்படமும் அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.