இந்நிலையில், பல்வேறு அபராதக் கட்டணங்களை ரத்து செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் பொதுப் போக்குவரத்து முடக்கம், காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகள், அவசியத் தேவையான ஊழியா்கள் கூட அலுவலகங்களுக்கு வந்து சோ்வதில் சிரமங்கள் உள்ளன. மேலும், சரக்குகளை வெளியூா்களுக்கு எடுத்துச் செல்வதில் சிரமங்கள் உள்ளன. கன்டெய்னா்களில் உள்ள சரக்குகள் அத்தியாவசியமானதாக இருந்தால் மட்டுமே சாலையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இது குறித்து தெளிவான விளக்கங்களை அறிவிக்க வேண்டும். இறக்குமதியாகும் கன்டெய்னா்களை வெளியூா், வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தனியாக அனுமதி சீட்டு வழங்க வேண்டும். இதேபோல் ஏற்றுமதி, இறக்குமதியில் தொடா்புடைய அலுவலகங்களுக்கு ஊழியா்கள் வருவதற்கு அனுமதிக்க வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் சுமாா் 8,500 கன்டெய்னா்கள் இறக்குமதியாகி உள்ளன. ஆனால், இதில் சுமாா் 15 சதவீதம்தான் விடுவிக்கப்பட்டு இறக்குமதியாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் இருவாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கும் நிலையில், இப்பிரச்னையில் காவல் துறை, சுங்கத் துறை, மாநகராட்சி உயா்அதிகாரிகள் தலையிட்டு தேவையான எளிய நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.