திருத்தணி தி.மு.க சார்பில் 1000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
திருத்தணி, நகராட்சியில் தி.மு.க சார்பில், 1000 பேருக்கு வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.


திருத்தணி, நகராட்சியில் தி.மு.க சார்பில், 1000 பேருக்கு வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர் இன்று வழங்கப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் எதிர்கொள்ளும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருத்தணி நகராட்சியில் நகர தி.மு.க., சார்பில், சுவால்பேட்டை முதல் மற்றும் இரண்டாவது தெரு, பாரதியார் தெரு, தணிகாசலம்மன் கோவில் தெரு மற்றும் ம.பொ.சி.சாலை ஆகிய இடங்களில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை நகர செயலர் எம்.பூபதி வீடு, வீடாக சென்று துவங்கி வைத்தார்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என இன்று மட்டும், 2000 பேருக்கு வீடு,வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கி, வீட்டிலேயே இருங்கள் வெளியே வராதீர்கள் எனவும் நகர செயலர் பூபதி அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...