சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தன்னார்வ அமைப்புகள் உதவி வழங்க அரசு தடை விதித்ததை எதிர்த்து தி.மு.க. முறையீடு

ஊரடங்கு உத்தரவு அமலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு பொருள்கள் உள்ளிட்வைகளை  வழங்கும் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள் உத்தரவை எதிர்த்து திமுக சார்பில்

News image
chennai High Court
Updated On :13 ஏப்ரல் 2020, 7:17 am

டி.குமாா்

ஊரடங்கு உத்தரவு அமலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு பொருள்கள் உள்ளிட்வைகளை  வழங்கும் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்களுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்துள் உத்தரவை எதிர்த்து திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் முறையீடு செய்துள்ளார். கரோனா வைரஸ்  பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. 

இவ்வாறு வழங்குவது 144 தடை உத்தரவுக்கு எதிரானது எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையர், மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்களையும், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் திமுக சார்பில் மூத்த வழக்குரைஞர் வில்சன், சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் முறையீடு செய்துள்ளார்.

இந்த முறையீடு ஏற்கப்பட்டால் இன்று பிற்பகல் வழக்குவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அல்லது வரும் புதன் கிழமை (ஏப் 15) வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.