ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெல்லைக்கு 1000 விரைவு பரிசோதனை கருவிகள் வருகை: கரோனா பரிசோதனை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் விரைவு பரிசோதனை கருவிகளைக் கொண்டு கரோனா பரிசோதனை செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 9:33 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் விரைவு பரிசோதனை கருவிகளைக் கொண்டு கரோனா பரிசோதனை செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதற்காக 1000 விரைவு பரிசோதனை கருவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 60 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கண்காணிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கரோனா துரித பரிசோதனைக்காக சீனாவில் இருந்து விரைவு பரிசோதனை கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி முதன்முதலில் சேலத்தில் இப் பரிசோதனை தொடங்கி வைக்கப்பட்டது.  திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா துரித பரிசோதனை மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிசோதனையைத் தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியது: கரோனா நோய்த் தொற்று காரணமாக மேலப்பாளையம், கோடீஸ்வரன்நகர், களக்காடு, பத்தமடை, வள்ளியூர், கிருஷ்ணாபுரம், கே.டி.சி.நகர், டார்லிங் நகர் ஆகிய பகுதிகள் கண்காணிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 1200-க்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா துரித பரிசோதனைக்காக மொத்தம் 1000 விரைவு பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் துரித பரிசோதனையின் மூலம் 20 நிமிடங்களிலேயே கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்து அறிய முடியும். அதன்பின்பு பி.சி.ஆர். பரிசோதனைக்கு அந்த நபர் உள்படுத்தப்படுவார். அதேபோல கரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவோருக்கு அடுத்தடுத்த பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன்பாக விரைவு பரிசோதனை கருவியில் பரிசோதனை செய்யும்போது காலவிரயம் ஏற்படாமல் தடுக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைவு பரிசோதனை கருவிகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. கரோனா அறிகுறி உள்ளவர்களுக்குதான் முதல்கட்டமாக இந்தப் பரிசோதனை செய்யப்படும். 

Story image

கூடுதலாக கருவிகள் வந்ததும் நோயாளிகளின் உறவினர்கள் மட்டுமன்றி அந்தப் பகுதியில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகிப்பவர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் உள்ளிட்டோருக்கும் கரோனா துரித பரிசோதனை செய்ய திடடமிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 4 நடமாடும் மருத்துவக் குழு மூலம் சளி, ரத்தம் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. 3500 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்றார் அவர். தொடக்க நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கண்ணன், மாநகர நல அலுவலர் சத்தீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.