மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தடைக்காலங்களிலும் தடையில்லாமல் தொடரும் மணல் கடத்தல்: அன்னவாசலில் 2 டிராக்டர் பறிமுதல்

அன்னவாசலில் மணல் கடத்திய இரண்டு டிராக்டர்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து 2-பேரை போலிஸார் கைது செய்தனர்.

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 6:34 am

DIN

அன்னவாசலில் மணல் கடத்திய இரண்டு டிராக்டர்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து 2-பேரை போலிஸார் கைது செய்தனர்.

அன்னவாசல் பகுதியில் ஊரடங்கையும் மீறி சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து துணைஆய்வாளர் வீரமணி தலைமையில்  போலீசார் அன்னவாசல் அருகேயுள்ள  கூத்தினிப்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் சித்தன்னவாசல் பகுதியை சேர்ந்த அய்யாசாமி, கார்திக் ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து கார்திகை (20) கைது செய்தனர்.

இதேபோல அன்னவாசல் அருகே  உள்ள புதுவயல் குளவாய்கருப்பர் கோவில் அருகே அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த  டிராக்டாரை பறிமுதல் செய்த போலீசார் ராப்பூசல் கீழக்களம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, வடுகப்பட்டியை சேர்ந்த ரங்கசாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சத்தியமூர்த்தியை (33) கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.