தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கறி சோறு தான் முக்கியம்: நெருக்கியடித்த ஈரோடு மக்கள்

கரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில் சமூக இடைவெளி கட்டாயம் என அரசு வலியுறுத்தி வருகிறது. 

News image
Updated On :19 ஏப்ரல் 2020, 9:51 am

DIN

ஈரோடு: கரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில் சமூக இடைவெளி கட்டாயம் என அரசு வலியுறுத்தி வருகிறது. 

ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாத ஈரோடு நகர மக்கள் இறைச்சிக் கடைகளில் முண்டியடித்துக்கொண்டு நின்றனர். நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டும் வெளியே வர வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது முகக் கவசங்கள், கையுறை, போதிய சமூக இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் இவற்றை எல்லாம் காற்றில் பறக்கவிடும் வகையில் ஈரோட்டில் இன்று காலை இறைச்சி வாங்க மக்கள் முண்டியடித்துக் கொண்டு நின்றனர். 

பெரும்பாலான இடங்களில் இறைச்சி வாங்க வந்தோர் முகக் கவசம் அணிந்து இருந்தாலும், டைவெளி விடாமல் முண்டியடித்துக்கொண்டு நின்று வாங்கிச்சென்றனர். ஆட்டிறைச்சி கிலோ ரூ.900-க்கும், கோழி இறைச்சி கிலோ ரூ.190-க்கு விற்பனை ஆனது. தற்போது சந்தைகள் மூடப்பட்டு இருப்பதால் ஆடுகள் கிடைப்பதில்லை எனவும் உள்ளூர் பகுதியில் தேடிப்பிடித்து ஆடுகளை வாங்கி வர வேண்டியிருப்பதால் விலை உயர்ந்து இருப்பதாகவும், இறைச்சிக்கோழி வரத்து குறைவால் அதன் விலையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.