புதுச்சேரியில் 42,357 கட்டடத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும்: முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் 42,357 கட்டடத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் 42,357 கட்டடத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பாதிப்புக்குள்ளான 3 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடைய 42 பேரை பரிசோதித்ததில், அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, புதுவை அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 2,000 வழங்கியுள்ளது.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ், சிவப்பு அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்குவதற்கான கோப்பு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு நிவாரணம். இந்நிலையில் கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் தலா ரூ. 1,000 வழங்கப்படும்.
இதன் மூலம் 28,160 அமைப்புசாரா தொழிலாளர்கள் பலனடைவர். இதே போல, கட்டடத் தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 2,000 வழங்கப்படும். இதன் மூலம் 42,357 கட்டடத் தொழிலாளர்கள் பலனடைவர். இந்தத் தொகை புதன்கிழமை முதல் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தளர்த்த முடியாது. புதுவையில் கரோனா ஊரடங்கு கட்டுக்குள் வைத்துள்ள இந்த நிலையை தளர்த்த முடியாது.
புதுவை மக்களின் உயிர்தான் முக்கியம். அதனால் பொருளாதாரத்தில் எத்தகைய இழப்பு ஏற்பட்டாலும், நெருக்கடி வந்தாலும் அதனை சந்தித்து, புதுவை மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்போம் என்றார் முதல்வர் வே. நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...