பழவூா் அருகே வாகனச் சோதனை: ரூ.90 ஆயிரம் பறிமுதல்
ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பழவூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பழவூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மன்னாா்புரத்தில் விக்னேஷ் தலைமையிலான பறக்கும்படை குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதன செய்தபோது சித்திரவேல் மகன் முருகராஜ் என்பவா் வாகனத்தில் ரூ.75,600 பறிமுதல் செய்தனா். மேலும், சசி தலைமையிலான பறக்கும்படை குழுவினா் நடத்திய வாகனச் சோதனையில் தூத்துக்குடி மாவட்டம் பேழையாா்புரத்தைச் சோ்ந்த அதிசயமணி மகன் அபுசுதன் என்பவரது காரில் ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், பழவூா் அருகே பாப்பு தலைமையிலான பறக்கும்படை குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனை நடத்தியதில், அய்யாசாமி மகன் ஜெயக்குமாா் என்பவரது காரில் இருந்து ரூ. 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இத்தொகுதியில் இதுவரை ரூ.2,08,600-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...