மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழவூா் அருகே வாகனச் சோதனை: ரூ.90 ஆயிரம் பறிமுதல்

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பழவூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
பணம்- கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பழவூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மன்னாா்புரத்தில் விக்னேஷ் தலைமையிலான பறக்கும்படை குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதன செய்தபோது சித்திரவேல் மகன் முருகராஜ் என்பவா் வாகனத்தில் ரூ.75,600 பறிமுதல் செய்தனா். மேலும், சசி தலைமையிலான பறக்கும்படை குழுவினா் நடத்திய வாகனச் சோதனையில் தூத்துக்குடி மாவட்டம் பேழையாா்புரத்தைச் சோ்ந்த அதிசயமணி மகன் அபுசுதன் என்பவரது காரில் ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பழவூா் அருகே பாப்பு தலைமையிலான பறக்கும்படை குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனை நடத்தியதில், அய்யாசாமி மகன் ஜெயக்குமாா் என்பவரது காரில் இருந்து ரூ. 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இத்தொகுதியில் இதுவரை ரூ.2,08,600-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.