காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாய்லாந்து நாட்டினர் 6 பேருக்கும் ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்க வசதிகள் செய்து தரப்படும்: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஈரோடு:ஈரோட்டில் கரோனா பரப்பியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள தாய்லாந்து நாட்டினர் 6 பேருக்கும் ரம்ஜான் நோன்பு இருக்க அனைத்து வசதிகளும் மாவட்ட காவல்துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :26 ஏப்ரல் 2020, 10:49 am

DIN

ஈரோடு:ஈரோட்டில் கரோனா பரப்பியதாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ள தாய்லாந்து நாட்டினர் 6 பேருக்கும் ரம்ஜான் நோன்பு இருக்க அனைத்து வசதிகளும் மாவட்ட காவல்துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் கூறியதாவது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 குணமடைந்து விட்டனர்.  ஆனால் அவர்கள் சுற்றுலா விசாவில் வந்து மத பிரசாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காகவும், நோய் பரப்பியதாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது 6 பேரும் போலீஸ் காவலில், மருத்துவக் கண்காணிப்பில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளனர். 6 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து ஈரோட்டில் உள்ள தாய்லாந்து நாட்டினரை திருச்சியில் உள்ள முகாமில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டினர் 6 பேரும் ரம்ஜான் நோன்பு இருப்பதற்காக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தேவையான உணவுகள் மருத்துவமனையிலேயே வழங்கப்பட்டது.

அதேபோல் அவர்கள் நோன்பு முடிப்பதற்கும் மாலையில் உணவுகள் வழங்கப்பட்டது. இதேபோல் அவர்கள் ஈரோட்டில் இருக்கும் வரை நோன்பு இருக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.