6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை: முதல்வர்

காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 ஏப்ரல் 2020, 6:47 am

DIN

காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 12 ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

சென்னை தலைமைச்செயலத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய முதல்வர், கரோனா நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள்.

பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கரோனா பரவலை தடுக்க முடியும். வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் பெரிய இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆரம்ப கால கட்டத்திலேயே மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், எளிதாக தடுக்கலாம். காய்கறி சந்தைகளை கையாள்வதில் தான் பிரச்னை.

அதனை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். காய்கறி சந்தைகளில் தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக பின்பற்றுவதில்லை. கரோனா குறித்து காவல்துறையும், உள்ளாட்சி துறையும் ஒலிபெருக்கி மூலம் வீதிவீதியாக தெரிவிக்க வேண்டும் என்றார். 

மேலும் கூட்டத்தில் மே 3க்குப் பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.