சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது ஈரோடு மாவட்டம்

கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம் சிவப்பு குறியீட்டு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு குறியீட்டு  மண்டலத்திற்கு இன்று மாற்றப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 2:19 pm

DIN

ஈரோடு: கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம் சிவப்பு குறியீட்டு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு குறியீட்டு  மண்டலத்திற்கு இன்று மாற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றின் காரணமாக மொத்தம் 70 நபர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 பேர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில் எஞ்சிய 69 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டனர். 

இதையடுத்து கடந்த 28 ஆம் தேதி முதல் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டது. மேலும் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 70 பேர் பாதிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டம் சிவப்பு குறியீட்டு மண்டலத்தில் இருந்து வந்தது. 

கடந்த 15 ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து 14 நாட்களாக புதிதாக கரோனா நோய் தொற்று எதுவும் மாவட்டத்தில் உறுதிபடுத்தப்படாததால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கை மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டதையடுத்து, ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாறியதாக அறிவிக்கப்பட்டு மாநில வரைபட பட்டியலில் நிறம் மாற்றம் செய்யப்பட்டது.

இனிவரும் நாட்களில் கடைகள், தொழிற்சாலை, வாகன இயக்கம், போக்குவரத்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தளர்வு போன்ற நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும். இதற்கான வழிமுறைகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்படாவிட்டால், பச்சை மண்டலத்திற்கு மாற்றப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.