தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானலில் பலத்தமழை: சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மரம் விழுந்ததைத் தொடர்ந்து அதனை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

News image

சாலையில் விழுந்த மரத்தை அகற்றிய பணியாளர்கள்

Updated On :4 ஆகஸ்ட் 2020, 12:30 pm

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மரம் விழுந்ததைத் தொடர்ந்து அதனை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் பெய்து வந்த சாரல் மழையால் மன்னவனுர் பகுதியில் மரங்கள் சாலையில் விழுந்தன.

இதனை அறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின் போக்குவரத்தை சீர் செய்து சாலையில் விழுந்த மரங்களை அகற்றினர்.

கொடைக்கானலில் தொடர்ந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் வழக்கத்திற்கு மாறாக குளிர் அதிகமாக நிலவுகிறது. பலத்த காற்று காரணமாக கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனுர், கிளாவரை, பூண்டி உள்ளிட்டபகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.