தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானலில் தொடர் மழை: பீன்ஸ் செடியில் மஞ்சள் நோய் தாக்குதல்

கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் பீன்ஸ் பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால்  விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

News image

மஞ்சள் நோய் தாக்கிய பீன்ஸ் பயிர்

Updated On :5 ஆகஸ்ட் 2020, 1:00 pm

கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் பீன்ஸ் பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால்  விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கொடைக்கானலின் சுற்றுவட்டாரப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, பூண்டி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, செண்பகனுர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பீன்ஸ் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 15நாட்களுக்கு மேலாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில்  தொடர் மழை பெய்து வருவதால் பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்கியுள்ளது. இதனால் பீன்ஸ் காய்கள் விளைச்சலின்றி காணப்படுகின்றன. பயிர்கள் சேதமடைந்ததால் இவற்றை பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது, “கொடைக்கானல் பகுதியில் தற்போது பீன்ஸ் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளை ஒரு ஏக்கருக்கு ரூ 25 ஆயிரம் செலவு செய்து உரமிட்டு பூச்சி மருந்து தெளித்துப் பாதுகாத்து வந்தோம். ஆனால் தற்போது மஞ்சள் நோய் தாக்கத்தினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளோம்.” எனத் தெரிவித்தனர்.

எனவே கொடைக்கானலிலுள்ள தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த பீன்ஸ் பயிர்களை பார்வையிட்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.