இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது மத்திய அரசு தரப்பில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம், செப்டம்பர் 7-ஆம் தேதி வரை தடை விதித்துள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை எதிர்காலத்தில் நீக்கக்கூடியது. எனவே, இந்த சட்ட வரைவு அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும்வரை தடை விதிக்க வேண்டும். இந்த சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக பொதுவான இணையதளத்தில் மத்திய அரசு வெளியிடவில்லை.