சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாரமங்கலம் அருகே உள்ள செலவடை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ஒன்பது பேர் கோவையில் கட்டிட வேலை செய்து விட்டு வெள்ளிக்கிழமை இரவு சொந்த ஊர் திரும்புவதற்காக கோவை அருகே உள்ள நீலாம்பூர் சுங்கச்சாவடி பகுதியில் கோவையிலிருந்து சேலம் செல்லும் டெம்போவில் உதவி கேட்டு ஏறி பயணம் செய்துள்ளனர். டெம்போவை சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் கெமிக்கல் பவுடர் பாரம் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அப்போது சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பேருந்து நிறுத்தம் அருகே டெம்போவிற்கு முன்னாள் அரிசி மூட்டைகள் பாரம் ஏற்றிக் கொண்டு கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் எதிர்பாரதவிதமாக மோதியுள்ளது.