சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.189.38 கோடி வசூலாகியுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :9 ஆகஸ்ட் 2020, 7:11 am

DIN

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.189.38 கோடி வசூலாகியுள்ளது. 

தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து, முந்தைய நாள் சனிக்கிழமைகளில் டாஸ்மாக்  கடைகளில் மது விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதன்படி, நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. 

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.41.57 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

அதேநேரத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை ரூ.188.86 கோடி வசூலாகி இருந்தது. கடந்த 6 வாரங்களில் நேற்று ஒரேநாளில் அதிக விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.