தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேட்டூர் அணை: நீர்மட்டம் 100 அடியாக உயர வாய்ப்பில்லை

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்து வருவதால் தற்போதைக்கு அணையின் நீர் மட்டம் 100 அடியாக உயரும் வாய்ப்பு இல்லை. 

News image
Updated On :13 ஆகஸ்ட் 2020, 3:42 am

DIN

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிந்து வருவதால் தற்போதைக்கு அணையின் நீர் மட்டம் 100 அடியாக உயரும் வாய்ப்பு இல்லை. 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்த்த பருவமழை தனிந்தது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. நீர்வரத்து குறைந்த காரணத்தால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டு வந்த உபரிநீர் குறைக்கப்பட்டது.

உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருந்த நீர்வரத்து நேற்று புதன்கிழமை காலை விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும் இன்று வியாழக்கிழமை காலை விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.