இ-பாஸ் தளர்வால் சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இணைய வழி அனுமதிச் சீட்டு கட்டாயமாக்கப்பட்டது. பல மாவட்டங்களில் இணையவழி அனுமதிச் சீட்டு வழங்குவதில் அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், அனுமதிச் சீட்டு பெறுவதில் பெறும் சிரமம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடா்ந்து, இணைய வழி அனுமதிச் சீட்டு வழங்கும் முறையில் பல்வேறு தளா்வுகளை முதல்வா் பழனிசாமி அறிவித்தாா். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் இ-பாஸ் தளர்வால் சென்னையின் நுழைவு வாயிலான செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களில் சென்னைக்கு வரும், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதாா் அல்லது குடும்ப அட்டையுடன் செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்தால் எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன் விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம், புதுச்சேரியில் மதவாத அரசியலுக்கு இடமில்லை! - தொல். திருமாவளவன் எம்.பி.

ஓமலூா் தொகுதிக்கான திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள்! - அமைச்சா் ராஜேந்திரன் அறிவிப்பு

எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


