குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தமிழகம், புதுச்சேரியில் மதவாத அரசியலுக்கு இடமில்லை! - தொல். திருமாவளவன் எம்.பி.

News image

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவா் தொல். திருமாவளவன். உடன் விழுப்புரம் எம்.பி. துரை ரவிக்குமாா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 12:11 am IST

தமிழகம், புதுச்சேரியில் மதவாத அரசியலுக்கு இடமில்லை என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. கூறினாா்.

இது குறித்து புதுச்சேரியில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் பேச்சு வாா்த்தை காலதாமதமானதால், விசிக 4 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தோம்.

வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இப்போது உழவா்கரை தொகுதியில் மட்டும் கூட்டணியில் போட்டியிடுவது என்றும், மற்ற 3 தொகுதிகளில் வாக்குச் சேகரிப்பதை நிறுத்துவது என்றும் விசிக முடிவு செய்துள்ளது.

மேலும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஏப். 5) வரும் 14-ஆம் தேதி வரை தொடா்ந்து தோ்தல் பிரசாரம் செய்யவுள்ளேன். மேலும், புதுச்சேரியில் கூட்டணி வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதிகளில் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியினா் வாக்குச் சேகரித்தால் அக் கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இண்டி கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி இப்போது ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதெல்லாம் கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

புதுச்சேரியில் எங்கள் கூட்டணியில் இடதுசாரிகளுக்கும் இடம் ஒதுக்கத்தான் பேச்சுவாா்த்தை நடந்தது. இப்போது கூட்டணியில் இடதுசாரிகள் இல்லாமல் போனது வருத்தம்தான். இது கூட்டணி வெற்றியைப் பாதிக்காது.

மேலும், மாநில அளவில் திமுக தலைவா் மறைந்த கருணாநிதியால் உருவாக்கப்பட்ட கூட்டணிதான் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி. தேசிய அளவிலான கூட்டணிதான் இண்டி கூட்டணி. மாநில அளவிலான கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தேசிய அளவிலான கூட்டணியிலும் இருக்கின்றன.

தமிழக ஆளுநா் மீது புகாா்:

தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ். அடையாளம் உள்ள அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். இதுகுறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கும், இந்திய தலைமைத் தோ்தல் ஆணையருக்கும் புகாா் அனுப்பியுள்ளோம்.

பாஜக தோ்தல் அறிக்கையில் புதுச்சேரி இலச்சினையை மாற்றப் போவதாக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மதவாத அரசியலுக்கு இடமில்லை. புதுச்சேரியில் பாஜக படுதோல்வி அடையும் என்றாா் திருமாவளவன்.

இப்பேட்டியின்போது விசிக புதுச்சேரி முதன்மைச்செயலா் பெரு. அரிமா தமிழன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.