டாஸ்மாக் கடைகளை திறந்து கரோனாவை பெருக்கிட வேண்டாம்: ஸ்டாலின்
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்து கரோனாவை பெருக்கிட வேண்டாம் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


சென்னை: சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்து கரோனாவை பெருக்கிட வேண்டாம் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இது குறித்து கூறியிருப்பதாவது, சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களில் கரோனா பரவலை ஏற்படுத்தி அதிகப்படுத்தியதில் பெரும்பங்கு டாஸ்மாக் கடைகளுக்கு உண்டு என்று நன்றாகத் தெரிந்தபிறகும், சென்னையில் கடைகளைத் திறப்பது கரோனா பரவலுக்கான பெருவழி; அதுவும் ஊரடங்கு காலத்தில் திறப்பது, தவறுக்கு மேல் தவறு செய்வதாகும்!
யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்!
கரோனாவின் தீவிரம் குறையாத ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் வேண்டாம்; கடைகளைத் திறந்து வைரஸ் உற்பத்தியை மேலும் பெருக்கிட வேண்டாம்! என்று வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...