அன்றைய தினம் காலையில் ஆட்சியர்களுடனும், பிற்பகலில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும் இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் பொது முடக்கத்தில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று சென்னையைப் போன்றே பிற மாவட்டங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற பொது முடக்கமும், பிற தினங்களில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.