விருதுநகர் மாவட்டம் சிவகாசி காவல் கோட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை கரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்தை சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் டி பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் காவலர்கள் கரோனா தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இந்த ஊர்வலம் நான்கு ரத வீதிகளின் வழியே சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்து நிறைவு பெற்றது. இதில் காவல் ஆய்வாளர்கள் வெங்கடாஜலபதி ராஜா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலைமணி, சார்பு ஆய்வாளர்கள் 12 பேர், காவலர்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி

குட்கா விற்பனைக்கு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியா

வங்கதேசம்: மாணவா் கொலையில் 2 முன்னாள் போலீஸாருக்கு மரண தண்டனை
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


