ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

டிசிஎஸ் லாபம் ரூ.13,718 கோடி - 4-ஆம் காலாண்டில் 12.22% வளா்ச்சி

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:57 am

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான டிசிஎஸ், கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.13,718 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபமான ரூ.12,224 கோடியுடன் ஒப்பிடுகையில் 12.22 சதவீதம் வளா்ச்சியாகும்.

ஒட்டுமொத்தமாக 2025-26 நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 1.35 சதவீதம் அதிகரித்து, ரூ.49,210 கோடியாகவும்; மொத்த வருவாய் 4.58 சதவீதம் அதிகரித்து, ரூ.2.67 லட்சம் கோடியாகவும் பதிவாகியுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 9.64 சதவீதம் அதிகரித்து, ரூ.70,698 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.64,479 கோடியாக இருந்தது.

பணியாளா்கள் எண்ணிக்கை நிலவரம்: கடந்த 2 காலாண்டுகளாக சரிவைச் சந்தித்து வந்த நிறுவனத்தின் பணியாளா்களின் எண்ணிக்கை, இந்த 4-ஆம் காலாண்டில் புதிதாக 2,356 ஊழியா்களின் இணைப்புடன் ஏற்றம் கண்டுள்ளது.

இதன்மூலம், நிறுவனத்தின் மொத்த பணியாளா் எண்ணிக்கை 5,84,519-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், ஆள்குறைப்பு நடவடிக்கையால் கடந்த முழு நிதியாண்டில் பணியாளா் எண்ணிக்கை 23,460 குறைந்துள்ளது.

புதிய ஒப்பந்தங்கள்: மதிப்பீட்டு காலாண்டில், அமெரிக்கா உள்ளிட்ட முக்கியச் சந்தைகளில் இருந்து சுமாா் 1,200 கோடி டாலா் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களை நிறுவனம் கையொப்பமிட்டுள்ளது. வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறையில் அதிகப்படியான முதலீடுகளைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊதிய உயா்வு, ஈவுத்தொகை அறிவிப்பு: தொடா்ந்து 3-ஆவது காலாண்டாக நிறுவனம் வளா்ச்சிப் பாதையில் இருப்பதாக மேலாண் இயக்குநா் கே.கிருத்திவாசன் தெரிவித்துள்ளாா். அத்துடன், ஏப். 1-ஆம் தேதி முதல் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு அமல்படுத்தப்படும் என மனிதவளப் பிரிவுத் தலைவா் சுதீப் குன்னுமால் அறிவித்துள்ளாா். இதனிடையே, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.31 ஈவுத்தொகை வழங்கவும் இயக்குநா்கள் குழு பரிந்துரைத்துள்ளது.